இந்த மாநிலத்தில் 22 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறப்பு
சரியாக 22 மாதங்களுக்குப் பிறகு, தற்போது கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்திருக்கும் நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 17 மாவட்டங்களுக்கு பள்ளிகளைத் திறக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஞ்சி: சரியாக 22 மாதங்களுக்குப் பிறகு, தற்போது கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்திருக்கும் நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 17 மாவட்டங்களுக்கு பள்ளிகளைத் திறக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மற்ற 7 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடைபெற்ற மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சந்தைகள் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு அதிகரித்ததால், மாநில அரசு ஜனவரி 3ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிலையங்கள் ஜனவரி 31 வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.