இந்தியா

உ.பி.யில் போலி தடுப்பூசி உற்பத்தி: 5 பேர் கைது 

DIN

உத்தரப் பிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையின் வாராணசி பிரிவு, லங்கா பகுதியில் உள்ள ரோஹித் நகரில் போலி கரோனா தடுப்பூசி மற்றும் சோதனைக் கருவிகளின் உற்பத்திப் பிரிவைக் கண்டுபிடித்துள்ளனர்.

காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின்பேரில், சம்பவ இடத்தை சோதனை செய்தபோது, அப்பகுதியிலிருந்த தடுப்பூசிகள் மற்றும் சோதனை கருவிகளை காவல்துறையினர் மீட்டனர். 

இதையடுத்து 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். 
கைது செய்யப்பட்டவர்கள் ராகேஷ் தவானி, சந்தீப் சர்மா, லக்ஷ்யா ஜாவா, ஷம்ஷேர் மற்றும் அருணேஷ் விஸ்வகர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விசாரணையில், தானும் அவரது உதவியாளர்களும் போலி தடுப்பூசி மற்றும் பரிசோதனை கருவிகள் தயாரிப்பதில் ஈடுபட்டதாக ராகேஷ் ஒப்புக்கொண்டார்.

இந்த போலி பொருட்கள் லக்ஷ்யாவுக்கு வழங்கப்பட்டன. மேலும் அவர் தனது நெட்வொர்க் மூலம் வெவ்வேறு மாநிலங்களுக்குச் சரக்குகளை வழங்குவதாகவும் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT