இந்தியா

ஒமைக்ரான் பரவலுக்குப் பின் 5 லட்சம் பேர் பலி

IANS


வாஷிங்டன்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உருமாறிய கரோனா வைரஸான ஒமைக்ரான் கண்டறியப்பட்ட பிறகு, கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற கரோனா தொற்றுகளை விட, பாதிப்புக் குறைவாக இருப்பதாகக் கருதப்படும் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட பிறகு உலகளவில் கரோனா பாதிப்பு கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியது. 

இந்த நிலையில், ஒமைக்ரான் கண்டறியப்பட்ட பிறகு, உலகளவில் 5 லட்சம் பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இவர்களில் அமெரிக்காவில் மட்டும் 1 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். 

அதுபோல, ஒமைக்ரான் பரவத் தொடங்கிய பிறகு, உலகளவில் 13 கோடிப் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதகாவும், 75 வயதுக்கு மேற்பட்டவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இணை நோய் இருந்தவர்களுக்குத்தான் ஒமைக்ரான் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT