இந்தியா

குஜராத்: பாகிஸ்தான் மீனவர்கள் 3 பேர் கைது, 11 படகுகள் பறிமுதல்

DIN

குஜராத்தின் பூஜ் பகுதியில் பாகிஸ்தான் மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவரது படகுகளையும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

பூஜ் பகுதியில் உள்ள ஹராமி நல்லா பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு, 11 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

ஹராமி நல்லாவில் பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் மற்றும் மீனவர்களின் ஊடுருவல் இருப்பதை வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, குஜராத் எல்லைப் பகுதி, பாதுகாப்புப் படையினர் உடனடியாக 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT