பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், மக்கள் கட்சியின் இணைத் தலைவருமான ஆசிப் அலி சர்தாரி உடல்நிலை திடீரென மோசடைந்ததால் ஞாயிறன்று லாகூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து சர்தாரியின் மருத்துவர் கூறுகையில்,
பாகிஸ்தானின் முன்னாள் அதிபரின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால்,
அவர் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பிற சோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால், அவர் கலந்துகொள்ளவிருந்து அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் பூரண நலம் பெற, முழுமையாக ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.