மகாராஷ்டிரத்தின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவுக்கு நக்கல்கள் அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளதால், அவருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தாணே குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தாணே குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்தாண்டு 26 தியாகி சகோதரர்கள், தளபதிகள் மற்றும் வீரர்கள் கொல்லப்பட்ட விதத்தில், உங்களையும் கொன்று நாங்கள் பழி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஷிண்டேவுக்கு இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன. அதையடுத்து கடந்த அக்டோபரில் மும்பையில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மிரட்டல் கடிதம் ஒன்று சிக்கியது.