விளம்பர மாடலாக மாறிய 60 வயது கூலித் தொழிலாளி: புகைப்படக் கலைஞரின் திறமை!
கேரளத்தில் 60 வயது கூலித் தொழிலாளி ஒருவர் விளம்பர மாடலாக மாறியுள்ள நிகழ்வு பலரையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
கேரளத்தில் 60 வயது கூலித் தொழிலாளி ஒருவர் விளம்பர மாடலாக மாறியுள்ள நிகழ்வு பலரையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
ஷரிக் வயாலில் என்ற புகைப்படக் கலைஞர், கூலித் தொழிலாளியை மாடலாக மாற்றி எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கூலித்தொழில் செய்து வருபவர் மம்மிக்கா. 60 வயதான இவர் லுங்கி, சட்டை அணிந்து சாதாரண மனிதராக வலம் வந்துகொண்டிருந்தார்.
Advertisement
Advertisement
தினக் கூலிக்காக அன்றாடம் பணிக்குச் செல்வது மட்டுமே அவரது பணியாக இருந்து வந்த நிலையில், இவரைக் கண்ட ஷரிக் வயாலில் என்ற புகைப்படக் கலைஞர் அவரை புகைப்படம் எடுக்க அணுகியுள்ளார்.
அவருடைய சாதாரண உடைகளுக்கு பதில், நேர்த்தியான உடையை உடுத்த வைத்து புகைப்படங்களை எடுத்துள்ளார். அதனைத் தனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் பகிந்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.