முகப்பு
இந்தியா

உ.பி: லக்னௌவில் பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார் பிரியங்கா காந்தி

உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா

Updated On : 21 பிப்ரவரி, 2022 at 2:11 PM
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
பகிர்:

லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 23-ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக லக்னௌவில் பொதுக்கூட்டத்தை  தொடங்கி வைத்தார்.

பிரியங்கா காந்தியின் பொதுக்கூட்டம் லக்னௌவின் பெரும்பகுதியை நாள் முழுவதும் உள்ளடக்கியதாக திட்டமிடப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் அலுவலகத் தலைவர் கூறினார்.

லக்னௌவில் மொத்தம் ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு பிப்ரவரி 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன் முடிவுகள் மார்ச் 10-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

Advertisement

இன்றுடன் நான்காம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.