இமாச்சல்: வெடி விபத்தில் 7 பேர் பலி, பிரதமர் மோடி இரங்கல்
இமாச்சப் பிரதேசத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் பலியாகினர்.
இமாச்சப் பிரதேசத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் பலியாகினர்.
இமாச்சலைச் சேர்ந்த உனா மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்த பிரதமர் மோடி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.