சசி தரூர் (கோப்புப் படம்) 
இந்தியா

'தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எந்தப் பிரச்னைகளுக்கும் முடிவில்லை': சசிதரூர்

இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எந்தப் பிரச்னைகளும் தீர்த்துவைக்கப்பட்டதில்லை என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். 

DIN

இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எந்தப் பிரச்னைகளும் தீர்த்துவைக்கப்பட்டதில்லை என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். 

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்த கருத்துக்கு, சசிதரூர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். 

இரு நாடுகளுக்கு இடையிலுள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து பிரதமர் மோடியுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதிக்க பிரதமர் இம்ரான் கான் நேற்று (பிப்.22) விருப்பம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இது குறித்து சசி தரூர் சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்தியத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் இதுவரை எந்தப் பிரச்னைகளும் தீர்த்துவைக்கப்பட்டதில்லை. மாறாக நிலைமையை மேலும் மோசமாகவே மாற்றியுள்ளது. டிஆர்பி புள்ளி அதிகரிக்கிறதென்றால், சில நெறியாளர்கள் மூன்றாம் உலகப் போரைத் தூண்டி விடுவதிலும் மகிழ்வார்கள் என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவைக்கு மோடி வருவாரா? வந்தால் நரவணே நூலை பரிசளிப்பேன்! ராகுல்

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்? - கனிமொழி பதில்!

வாக்காளரை துன்புறுத்தாதீர்; ஆதாரை ஏற்றுக்கொள்க: உச்ச நீதிமன்றத்தில் மமதா வாதம்

முக்கியத்துவம் பெறா நேரத்துக்கு மாற்றப்படும் ஆடுகளம் தொடர்!

மமதா அரசு மத்திய திட்டங்களைத் தடுக்கிறது: பாஜக எம்பி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT