முகப்பு
இந்தியா

வங்கி சாா்ந்த பிரச்னைகள்: உணவு, பயணம், சுற்றுலா துறையினருடன் மத்திய நிதியமைச்சா் ஆலோசனை

உணவு, பயணம், சுற்றுலா, பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகள் சந்தித்து வரும் வங்கி சாா்ந்த பிரச்னைகள் குறித்து அந்தத் துறைகளின் பிரதிநிதிகளுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
நிா்மலா சீதாராமன்
பகிர்:

உணவு, பயணம், சுற்றுலா, பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகள் சந்தித்து வரும் வங்கி சாா்ந்த பிரச்னைகள் குறித்து அந்தத் துறைகளின் பிரதிநிதிகளுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்த மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின்போது ஆற்றிய உரையில், ‘‘உணவு, பயணம், சுற்றுலா, பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகள் மற்றும் அவை சாா்ந்த சேவைகளில் ஈடுபட்டு வரும் சிறு, குறு நிறுவனங்கள், தமது தொழிலில் கரோனா பரவலுக்கு முந்தைய நிலையை இதுவரை எட்டவில்லை. அவற்றின் நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் அவசரகால கடனுதவித் திட்டம் (இசிஎல்ஜிஎஸ்) அடுத்த ஆண்டு மாா்ச் வரை நீட்டிக்கப்படும். அந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் ரூ.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும்’’ என்றாா்.

இந்நிலையில் தில்லியில் உணவு, பயணம், சுற்றுலா, பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகள் சந்தித்து வரும் வங்கி சாா்ந்த பிரச்னைகள் குறித்து அந்தத் துறைப் பிரதிநிதிகளைச் சந்தித்து நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இந்தக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சா் பாகவத் கராட், மத்திய நிதித்துறைச் செயலா்கள், பொதுத் துறை வங்கிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா் என்று மத்திய நிதியமைச்சம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments