இந்தியா

பிரிட்டன் விமானப் பயிற்சியில் இந்திய விமானங்கள் பங்கேற்காது: விமானப் படை

DIN


பிரிட்டனில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பல நாடுகள் பங்கேற்கவுள்ள 'கோப்ரா வாரியர்ஸ்' எனும் போர் விமானப் பயிற்சியில் இந்திய விமானங்கள் பங்கேற்காது என இந்திய விமானப் படை சனிக்கிழமை அறிவித்துள்ளது.

கோப்ரா வாரியர் போர் விமானப் பயிற்சி மார்ச் 6 முதல் 27 வரை பிரிட்டனிலுள்ள வேடிங்டனில் நடைபெறுகிறது. இதில் 5 போர் விமானங்கள் பங்கேற்கும் என இந்திய விமானப் படை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கோப்ரா வாரியர் போர் விமானப் பயிற்சியில் இந்திய விமானங்கள் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய நிகழ்வுகள் காரணமாக இந்த முடிவெடுக்கப்பட்டதாக விமானப் படை தெரிவித்துள்ளது.

காரணத்தைக் குறிப்பிட்டு கூறாதபோதிலும், உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டுள்ள ராணுவத் தாக்குதல் மற்றும் அதுதொடர்பான நிகழ்வுகளே இந்த முடிவுக்கான காரணமாக இருக்கக்கூடும் என்பது புரிந்துகொள்ள முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT