இந்தியா

உ.பி. பேரவைத் தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 47% வாக்குப்பதிவு

DIN

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 3 மணி வரை 46.28 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 

உத்தரப் பிரதேசத்தில் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே முதல் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

சித்ரகூட், பிரயாக்ராஜ், அமேதி, ரேபரலி, ராமர் கோயில் அமையவுள்ள அயோத்தி உள்ளிட்ட 61 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இதில் இன்று மாலை 3 மணி வரை 46.28 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT