உக்ரைனின் எல்லை நாடுகளுக்குச் செல்லும் 4 மத்திய அமைச்சர்கள் 
இந்தியா

உக்ரைனின் எல்லை நாடுகளுக்குச் செல்லும் 4 மத்திய அமைச்சர்கள்

போர் நடைபெற்று வரும் உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் பணிகைளை நேரில் கண்காணிக்கும் வகையில் 4 மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் எல்லை நாடுகளுக்குச் செல்லவிருக்கிறார்கள்.

PTI


புது தில்லி: போர் நடைபெற்று வரும் உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் பணிகளை நேரில் கண்காணிக்கும் வகையில் 4 மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் எல்லை நாடுகளுக்குச் செல்லவிருக்கிறார்கள்.

போர் தீவிரமடைந்திருக்கும் உக்ரைனில் இன்னும் ஏராளமான இந்தியர்களும், மாணவர்களும் சிக்கியிருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், உக்ரைனின் எல்லைப் பகுதிகளை பகிர்ந்து கொண்டிருக்கும் நாடுகளுக்கு நான்கு மத்திய அமைச்சர்கள் சென்று, இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வரும் பணிகளை நேரடியாக பார்வையிடுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் சிறப்புத் தூதுவர்களாக, மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் புரி, ஜோதிராதித்திய  சிந்தியா, கிரெண் ரிஜிஜு, வி.கே. சிங் ஆகியோர், உக்ரைனின் எல்லை நாடுகளுக்குச் செல்லவிருக்கிறார்கள்.

ருமேனியாவுக்கு சிந்தியாவும், ஸ்லோவாகியாவுக்கு ரிஜிஜுவும், ஹங்கேரிக்கு புரியும், போலந்துக்கு வி.கே. சிங்கும் செல்லவிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT