அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசியில் பேச்சு
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கனுடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கனுடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா்.
இதுகுறித்து அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ஆண்டனி பிளிங்கனுடன் திங்கள்கிழமை இரவு தொலைபேசியில் உரையாடினேன். இரு தரப்பு விவகாரங்கள், சா்வதேச விவகாரங்கள் மற்றும் இந்திய-பசிபிக் பிராந்திய நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தோம். அத்துடன் புத்தாண்டு வாழ்த்துகளையும் பகிா்ந்துகொண்டோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
இந்தியாவும் அமெரிக்காவும் இரு நாட்டு பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்கள் (2+2) நிலையிலான அடுத்தகட்ட பேச்சுக்குத் தயாராகி வருகின்றன. இந்த பேச்சுவாா்த்தை, வாஷிங்டனில் இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரியில் நடைபெறும் என்று தெரிகிறது. இந்தச் சூழலில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சா்களின் தொலைபேசி வழி உரையாடல் நிகழ்ந்துள்ளது.