இந்தியாவை மிரட்டும் கரோனா: ஒரு லட்சத்தை நெருங்கும் ஒருநாள் பாதிப்பு
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 90,928 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 90,928 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாட்டில் நேற்று 58,097 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றைய பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 90,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 325 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,82,876-ஆக அதிகரித்துள்ளது.
ஒரு நாளில் 19,206 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,85,401-ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 148.67 கோடி கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.