மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை மாநிலத்தில் நடைபெற்ற ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மூத்த கேரள பாஜக தலைவர் முரளிதரன், திடீரென பெங்களூரு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் சிவிட் சோதனை மேற்கொண்டார்.
அப்போது அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டில் தொற்றுநோய் ஏற்பட்டபோது, தலைநகரில் ஒரு முதன்மை சுகாதார நிறுவனத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, முரளிதரன் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.