புது தில்லி: நாட்டில் 15 - 18 வயதுடைய இரண்டு கோடிப் பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
தற்போது, நாட்டின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றியடையச் செய்ய இளைஞர்கள் இதில் சேர்ந்துகொண்டுள்ளனர். இதுவரை 15 - 18 வயதுடைய சிறார்கள் 2 கோடிப் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று புதுச்சேரியில் காணொலி காட்சி மூலமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி கூறினார்.
ஜனவரி 3ஆம் தேதி முதல் இதுவரை நாட்டில் 2,82,74,847 தவணை கரோனா தடுப்பூசிகள் 15 - 18 வயதுடைய சிறாருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.