முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பு நடவடிக்கை: முதல்வர்களுடன் மோடி ஆலோசனை

கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:07 AM
பகிர்:

கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகம், மகாராஷ்டிரம், தில்லி, குஜராத் மாநிலங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகளை விரைவுப்படுத்துவது குறித்து இதில் ஆலோசிக்கப்படுவதாகத் தெரிகிறது.

முன்களப் பணியாளர்கள், முதியவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்படுகிறது.

கரோனா பரவலின் தீவிரத்தால் அரசியல் தலைவர்கள் பலருக்கும் தொற்று உறுதியாகிவரும் நிலையில், மக்கள் பாதிக்கப்படாத வகையில், புதிய கட்டுப்பாடுகள் எதாவது அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.