இந்தியா

18 மாதங்களில் 3-வது முறை கரோனாவால் பாதிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.

ஒடிசாவில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் கடந்த 18 மாதங்களில் 3-வது முறை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

DIN

ஒடிசாவில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் கடந்த 18 மாதங்களில் 3-வது முறை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

பாஜக சட்டப்பேரவை உறுப்பினரான சுகந்த நாயக் என்பவர் கடந்த 18 மாதங்களில் மூன்றாவது முறை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒடிசா மாநிலம் பேலாசூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் முறை கரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் மீண்டும் தொற்றால் பாதிக்கப்பட்டார். 

இரண்டு முறை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையிலும், அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில் மீண்டும்  சுகந்த நாயக்கிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒடிசாவில் இதுவரை 50 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.பி.க்கள்,  11 அமைச்சர்கள் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT