முகப்பு
இந்தியா

தேசப்பிரிவினையால் 74 ஆண்டுகள் கழித்து சந்தித்த சகோதரர்கள்: நெகிழ்ச்சி விடியோ

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்த 2 சகோதர்கள் 74 ஆண்டுகள் கழித்து நேரில் சந்தித்துக் கொண்டனர்.

Updated On : 13 ஜனவரி 2022, 12:22 pm IST
தேசப்பிரிவினையால் பிரிந்த உறவு: 74 ஆண்டுகள் கழித்து சந்தித்த சகோதரர்கள்
பகிர்:

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்த 2 சகோதர்கள் 74 ஆண்டுகள் கழித்து நேரில் சந்தித்துக் கொண்டனர்.

1947-ஆம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைவின் போது சித்திக் மற்றும் ஹபிப் ஆகிய இரண்டு சகோதரர்களில் சித்திக் பாகிஸ்தானிலும் அவருடைய அண்ணன் ஹபிப் பஞ்சாபின் கர்தார்பூர் பகுதியிலும் தஞ்சம் அடைந்தனர்.

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தானை இணைக்கும் பஞ்சாப்பின் எல்லைப் பகுதிகளில் ஒன்றான கர்தார்பூர் நுழைவுப் பகுதியில் 74 ஆண்டுகள் கழித்து இரு சகோதரர்களும் நேற்று(ஜன.12) சந்தித்துக் கொண்டனர்.

Advertisement

Advertisement

சந்திப்பின்போது ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக் கொண்ட விடியோ காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.