உபி: ராஜிநாமா செய்த பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சமாஜவாதியில் இணைந்தனர்
உத்தரப் பிரதேசத்தில் ராஜிநாமா செய்த பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜவாதி கட்சியில் இன்று இணைந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் ராஜிநாமா செய்த பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜவாதி கட்சியில் இன்று இணைந்தனர்.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தலில் வெற்றி பெற பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | ம.பி: பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை(ஜன.15) முதல் ஜன.31 வரை விடுமுறை
Advertisement
Advertisement
இதற்கிடையில் உத்தரப் பிரதேசத்தில் சில பாஜக அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவியை ராஜிநாமா செய்தனர்.
இந்நிலையில், ராஜிநாமா செய்த பாஜக அமைச்சர்கள் சுவாமி பிரசாத் மௌரியா, தரம் சிங் சைனி, தாரா சிங் செளகான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வினய் சாக்யா, பகவதி சாகர் ஆகியோர் இன்று அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜவாதி கட்சியில் இணைந்தனர்.
இதனால், உத்தரப் பிரதேச தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.