உபி: ராஜிநாமா செய்த பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சமாஜவாதியில் இணைந்தனர் 
இந்தியா

உபி: ராஜிநாமா செய்த பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சமாஜவாதியில் இணைந்தனர்

உத்தரப் பிரதேசத்தில் ராஜிநாமா செய்த பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜவாதி கட்சியில் இன்று இணைந்தனர்.

DIN

உத்தரப் பிரதேசத்தில் ராஜிநாமா செய்த பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜவாதி கட்சியில் இன்று இணைந்தனர்.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்குகிறது.  தேர்தலில் வெற்றி பெற பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் உத்தரப் பிரதேசத்தில் சில பாஜக அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவியை ராஜிநாமா செய்தனர்.

இந்நிலையில், ராஜிநாமா செய்த பாஜக அமைச்சர்கள் சுவாமி பிரசாத் மௌரியா, தரம் சிங் சைனி, தாரா சிங் செளகான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வினய் சாக்யா, பகவதி சாகர் ஆகியோர் இன்று அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜவாதி கட்சியில் இணைந்தனர்.

இதனால், உத்தரப் பிரதேச தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT