இந்தியா

கரோனா: கோவா ஆளுநர் மாளிகையில் ஜன. 23 வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

DIN

கரோனா பரவல் எதிரொலியாக கோவா ஆளுநர் மாளிகையில் வருகிற ஜனவரி 23 வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, பொது இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கரோனா பரவல் எதிரொலியாக கோவா ஆளுநர் மாளிகையில் ஒரு வாரத்திற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவா ஆளுநர் மாளிகையில் ஊழியர்கள் பலருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் வருகிற ஜனவரி 23 ஆம் தேதி வரை மூடப்படுவதாகவும்  பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அதேநேரத்தில் ஆளுநர் மாளிகைக்கு வரும் கடிதங்கள், ஆவணங்கள் மட்டும் மெயின் கேட்டில் வாங்கப்படும் என்றும் ஆளுநரின் இணைச் செயலாளர் கௌரிஷ் ஜே. சங்க்வால்க்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT