கர்நாடகத்தைத் தொடர்ந்து தில்லியிலும் நல்ல முன்னேற்றம்: விரைவில் தளர்வுகள்?
கர்நாடக மாநிலத்தைத் தொடர்ந்து புது தில்லியிலும் புதிய கரோனா பாதிப்பு குறைந்திருப்பதையடுத்து, சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புது தில்லி: கர்நாடக மாநிலத்தைத் தொடர்ந்து புது தில்லியிலும் புதிய கரோனா பாதிப்பு குறைந்திருப்பதையடுத்து, சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு, எண் இலக்கத்தின் அடிப்படையில் கடைகளைத் திறக்கும் உத்தரவு போன்றவை நீக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க.. அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படுவது ஏன்? மத்திய அரசு விளக்கம்
எனினும், தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு புதிய கரோனா பாதிப்பு 17,335 ஆகப் பதிவான நிலையில், ஜனவரி 7 முதல் தேசியத் தலைநகர் தில்லியில் வார இறுதி நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது.