முகப்பு
இந்தியா

இந்தியா கேட்டில் நேதாஜிக்கு சிலை: பிரதமர் மோடி

தில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

Updated On : 21 ஜனவரி, 2022 at 1:09 PM
கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

இந்திய கேட்டில் உள்ள அமர்ஜவான் ஜோதி தேசிய போர் நினைவு சின்னத்துடன் இன்று இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடி வரும் நிலையில், கிரானைட் கற்களாலான அவரது பிரமாண்ட சிலையை இந்தியா கேட்டில் நிறுவப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நேதாஜிக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த சிலை திகழும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.