'சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது' 
இந்தியா

'சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது'

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளிவராது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


புது தில்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளிவராது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இயின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யாம் பரத்வாஜ் இந்த தகவலை உறுதி செய்ததாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முதலில் ஜனவரி மத்தியில் முதல் பருவத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பொங்கல் விடுமுறைகளைத் தொடர்ந்து ஜனவரி 24ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக வாய்ப்பில்லை என்று தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சிபிஎஸ்இ பத்து மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதத்தில் நடைபெற்று முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT