இந்தியா

'சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது'

DIN


புது தில்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளிவராது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இயின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யாம் பரத்வாஜ் இந்த தகவலை உறுதி செய்ததாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முதலில் ஜனவரி மத்தியில் முதல் பருவத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பொங்கல் விடுமுறைகளைத் தொடர்ந்து ஜனவரி 24ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக வாய்ப்பில்லை என்று தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சிபிஎஸ்இ பத்து மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதத்தில் நடைபெற்று முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT