FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

8 ஆண்டுகளில் 61 சதவிகிதம் குறைந்த கழுதைகளின் எண்ணிக்கை

இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் கழுதைகளின் எண்ணிக்கை 61 சதவிகிதம் குறைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

1 பிப்ரவரி 2024, 1:43 pm IST
8 ஆண்டுகளில் 61 சதவிகிதம் குறைந்த கழுதைகள் எண்ணிக்கை
பகிர்:

இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் கழுதைகளின் எண்ணிக்கை 61 சதவிகிதம் குறைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ப்ரூக் இந்தியா எனும் அமைப்பு இந்தியாவில் கழுதைகளின் இருப்பு குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. 

சமீபத்திய ஆய்வின்படி, திருட்டு, சட்டவிரோத வேட்டையாடுதல், மேய்ச்சல் நிலங்களின் பரப்பு குறைதல் உள்ளிட்ட காரணங்களால் 2012 மற்றும் 2019ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கழுதைகளின் மொத்த எண்ணிக்கையில் 61 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

மகாராஷ்டிரம், குஜராத், பீகார், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2012 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கழுதைகளின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இயந்திரமயமாக்கல், போக்குவரத்து சாதன வளர்ச்சிகள், கழுதைகள் அவற்றின் தோல்கள் மற்றும் இறைச்சிக்காக ஏற்றுமதி செய்யப்படுதல் போன்றவை அவற்றின் எண்ணிக்கை சரிவுக்கு காரணங்களாக அமைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும் சீனாவின் மருந்துப் பொருள் உற்பத்திக்காகவும் கழுதைகள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதும் கழுதைகள் எண்ணிக்கை குறைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

8 ஆண்டுகளில் மகாராஷ்டிரத்தில் கழுதைகளின் எண்ணிக்கை 39.69 சதவீதம் குறைந்துள்ளதாகவும், ஆந்திரத்தில் கழுதைகளின் எண்ணிக்கை 53.22 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எட்டு ஆண்டுகளில் ராஜஸ்தான் 71.31 சதவீத வீழ்ச்சியும், குஜராத்தில் 70.94 சதவீத வீழ்ச்சியும், உத்தரப் பிரதேசத்தில் 71.72 சதவீத வீழ்ச்சியும், பீகாரில் 47.31 சதவீதமும் கழுதைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments