இந்தியா

பெங்களூருவில் ரூ.5.3 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

DIN

பெங்களூரு விமான நிலையத்தில் 5.3 கோடி மதிப்பிலான போதைப்பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கடந்த ஜன.22 ஆம் தேதி துபையிலிருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த பயணியின் பையைப் பரிசோதனை செய்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் அதன் வடிவமைப்பு இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் அதைச் சோதனை செய்ததில் மறைத்து வைக்கப்படிருந்த 754 கிராம் எடைகொண்ட ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

இதன் சர்வதேச சந்தை மதிப்பு 5.3 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடத்தலில் ஈடுபட்ட பயணியை என்டிபிஎஸ் சட்ட விதிகளின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT