முகப்பு
இந்தியா

குடியரசு நாள் சாகசம்: முதல்முறையாக விமானி அறையிலிருந்து ஒளிபரப்பு(விடியோ)

குடியரசு நாள் விழாவின்போது இந்திய விமானப் படையின் சாகசத்தை காக்பிட் எனப்படும் விமானி அறையிலிருந்து இந்திய விமானப்படை ஒளிபரப்பிய காணொலி வைரலாகி வருகிறது.

Updated On : 26 ஜனவரி, 2022 at 2:00 PM
விமானி அறையிலிருந்து ஒளிபரப்பப்பட்ட காட்சிகள்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:44 PM

குடியரசு நாள் விழாவின்போது இந்திய விமானப் படையின் சாகசத்தை காக்பிட் எனப்படும் விமானி அறையிலிருந்து இந்திய விமானப்படை ஒளிபரப்பிய காணொலி வைரலாகி வருகிறது.

நாட்டின் 73-வது குடியரசு நாள் விழா தில்லி ராஜபாதையில் கொண்டாடப்பட்டு வருகின்றன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றிவைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்களின் சாகச நிகழ்வு நடைபெற்றது. இதில், விமானப் படை நடத்திய சாகச நிகழ்வானது விமானி அறையிலிருந்து முதல்முறையாக ஒளிபரப்பப்பட்டது.

Advertisement

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளான நிலையில் விமானப் படையின் 75 விமானங்கள் சாகச நிகழ்வில் பங்குபெற்றன. ரபேல், மிக்-29 உள்ளிட்ட விமானங்களின் விமானி காக்பிட்டிலிருந்து எடுக்கப்பட்ட காணொலியை மத்திய பாதுகாப்புப் படை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.