முகப்பு
இந்தியா

உத்தரகண்ட்: முன்னாள் காங். தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்

உத்தரகண்ட் மாநிலத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிஷோர் உபாத்யாய் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:14 AM
காங்கிரஸ்
பகிர்:

உத்தரகண்ட் மாநிலத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிஷோர் உபாத்யாய் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் சில வாரங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. அனைத்து கட்சிகளும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், உத்தரகண்ட் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிஷோர் கட்சிக்கு எதிராக செயல்படுவதால் 6 ஆண்டுகள் கட்சியிலிருந்து நீக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநில பொறுப்பாளர் தேவேந்திர யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கிஷோர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.