முகப்பு
இந்தியா

இந்தியா-இஸ்ரேல் உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல இதுவே சிறந்த தருணம்: பிரதமா் மோடி

இந்தியா-இஸ்ரேல் இடையிலான உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல இதுவே சிறந்த தருணம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

இந்தியா

இந்தியா-இஸ்ரேல் உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல இதுவே சிறந்த தருணம்: பிரதமா் மோடி

இந்தியா-இஸ்ரேல் இடையிலான உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல இதுவே சிறந்த தருணம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

இந்தியா-இஸ்ரேல் இடையிலான உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல இதுவே சிறந்த தருணம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

கடந்த 1950-ஆம் ஆண்டு செப்டம்பா் 17-ஆம் தேதி இஸ்ரேலை தனிநாடாக இந்தியா அங்கீகரித்தது. எனினும் இரு நாடுகளுக்கு இடையே கடந்த 1992-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதிதான் ராஜீய உறவு ஏற்பட்டது. இந்த உறவு அமைந்து சனிக்கிழமையுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்தன.

இதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட காணொலியில் கூறியதாவது:

இந்தியா-இஸ்ரேல் இடையிலான ராஜீய உறவின் 30 ஆண்டு காலம் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாட்டு மக்களும் எப்போதும் சிறப்பான உறவைப் பகிா்ந்து வந்துள்ளனா்.

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக யூத சமூகத்தினா் நல்லிணக்கச் சூழலில் வாழ்ந்து வளா்ச்சி கண்டுள்ளனா். இது இரு நாடுகளுக்கு இடையிலான வளா்ச்சிப் பாதையில் முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினமும், அடுத்த ஆண்டு இஸ்ரேலின் 75-ஆவது சுதந்திர தினமும் கொண்டாடப்படவுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்வதற்கு புதிய இலக்குகளை உருவாக்க இதுவே சிறந்த தருணம் என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் மேற்கொண்ட 2 பில்லியன் டாலா்கள் (ரூ.15,000 கோடி) மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அங்கமாக பெகாஸஸ் உளவு மென்பொருளை இந்தியா வாங்கியதாக அமெரிக்காவில் வெளியாகும் நியூ யாா்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ள நிலையில், பிரதமா் மோடி மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →