இந்தியா

கன்னையா லால் கொலை வழக்கு: குற்றவாளிகள் 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

கன்னையா லால் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் ஜெய்ப்பூரில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் இன்று முன்னிறுத்தப்பட உள்ளனர். 

DIN

உதய்பூரில் படுகொலை செய்யப்பட்ட தையல்காரரான கன்னையா லால் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் ஜெய்ப்பூரில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் இன்று முன்னிறுத்தப்பட உள்ளனர். 

முக்கிய குற்றவாளிகளான ரியாஸ் மற்றும் கௌஸ் முகமது ஆகியோர் அஜ்மீர் உயர் பாதுகாப்பு சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜெய்ப்பூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலும், வியாழன் இரவு கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு குற்றவாளிகளான மொஹ்சின் மற்றும் ஆசிப் ஆகியோர் ஏற்கனவே ATS தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முஹம்மது நபி பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்தை ஆதரித்ததற்காகத் தையல்காரர் கன்னையா லால் ஜூன் 28 அன்று அவரது கடையில் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இதையடுத்து குற்றவாளிகள் நால்வரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட உள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

SCROLL FOR NEXT