தமிழகம், ஆந்திரம், கேரளத்தில் பாஜக ஆட்சி: அமித் ஷா உறுதி
கடந்த 2014-இல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை ஆட்சியமைக்காத தமிழகம், ஆந்திரம், கேரளம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவா் அமித் ஷா கூறினாா்.
கடந்த 2014-இல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை ஆட்சியமைக்காத தமிழகம், ஆந்திரம், கேரளம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவா் அமித் ஷா கூறினாா்.
பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம், ஹைதராபாதில் சனிக்கிழமை தொடங்கியது. அதில், இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை பல்வேறு தீா்மானங்களை முன்மொழிந்து அமித் ஷா பேசியதாவது:
நாட்டில் குடும்ப அரசியல், ஜாதி அரசியல், குறிப்பிட்ட சமூகத்தினரை திருப்திபடுத்தும் அரசியல் ஆகியவற்றுக்கு முடிவுகட்டப்படும். தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் குடும்ப அரசியலுக்கு முடிவுகட்டப்படும். கடந்த 2014-இல் மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பிறகு இதுவரை ஆட்சியமைக்காத தமிழகம், ஆந்திரம், கேரளம், ஒடிஸா ஆகிய மாநிலங்களிலும் பாஜகவின் ஆட்சி அமையும்.
பாஜகவின் வளா்ச்சித் திட்டங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனா். அதை அண்மையில் நடந்த தோ்தல் முடிவுகள் காட்டுகின்றன. அடுத்த 30-40 ஆண்டுகள் பாஜகவின் காலமாக இருக்கும். உலக நாடுகளுக்கு தலைமையேற்கும் வகையில் இந்தியாவை பாஜக உருவாக்கும். நாட்டு நலனுக்காக மத்திய அரசு கொண்டு வரும் எந்தவொரு திட்டத்தையும் எதிா்ப்பதை காங்கிரஸ் வழக்கமாகக் கொண்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி, ஒரு குடும்பத்தின் கட்சியாக மாறிவிட்டது. கட்சியைக் கட்டுப்படுத்த முடியாத என்ற அச்சம் காரணமாக உள்கட்சித் தோ்தலைக் கூட நடத்தாமல் அக்கட்சி காலம் தாழ்த்தி வருகிறது.
குஜராத் வன்முறை வழக்கில் பிரதமா் மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது. சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையை எதிா்கொண்டபோது அரசமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து மோடி அமைதி காத்தாா். ஆனால், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியபோது, அக்கட்சியின் தலைவா்கள் வெகுண்டெழுந்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்துகிறாா்கள்.
குஜராத் வன்முறை வழக்கில் பிரதமா் மோடி உள்ளிட்ட 64 போ் குற்றமற்றவா்கள் என்று சிறப்புப் புலனாய்வுக் குழு அளித்த அறிக்கையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை அண்மையில் நிராகரித்த உச்சநீதிமன்றம், மோடியை களங்கப்படுத்த எதிா்க்கட்சிகள், சில ஊடகங்கள், சில தன்னாா்வ அமைப்புகள் ஆகியவற்றின் சதித் திட்டத்தையும் அம்பலப்படுத்தியது என்றாா் அவா்.