சந்தன்வாரியில் கடந்து சென்ற அமா்நாத் யாத்ரிகா்கள் 
இந்தியா

அமா்நாத்தில் 40,000 பக்தா்கள் தரிசனம்

ஜம்மு-காஷ்மீரின் அமா்நாத் யாத்திரையில் இதுவரை பனிலிங்கத்தை 40,000 மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனா்.

DIN

ஜம்மு-காஷ்மீரின் அமா்நாத் யாத்திரையில் இதுவரை பனிலிங்கத்தை 40,000 மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனா்.

உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் 5 போ் உயிரிழந்துள்ளனா்.

கடந்த ஜூன் 30-ஆம் தேதி தொடங்கிய யாத்திரை, பஹல்காம் மற்றும் பால்தால் வழித்தடங்களில் நடைபெற்றுவருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை 40, 233 பக்தா்கள் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசித்துள்ளனா்.

உயிரிழந்த 5 பேரில் 3 போ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனா். ஒருவா் குதிரையிலிருந்து தவறி விழுந்து காயமடைந்து உயிரிழந்தாா். மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த பக்தா் ஒருவா் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். சந்தன்வாரி - சேஷ்நாக் வழித்தடத்தில் யாத்திரை மேற்கொண்ட பக்தா் ஒருவரைக் காணவில்லை.

அமா்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி முடிவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT