மாநிலங்களவை உறுப்பினர் பதவி நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் மத்திய அமைச்சர் ஆர்.சி.பி.சிங் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான ஆர்.சி.பி.சிங் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய உருக்குத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார்.
இதையும் படிக்க | முக்தார் அப்பாஸ் நக்வி ராஜிநாமா! குடியரசு துணைத் தலைவராகிறாரா?
இந்நிலையில் நாளையுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் ஆர்.சி.பி.சிங் ராஜிநாமா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
ஏற்கெனவே மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ராஜிநாமா செய்த நிலையில் ஒரே நாளில் இரண்டாவது அமைச்சரும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.