பாதுகாப்பு அமைச்சக வெளிநாட்டு கொள்முதல்: 3 தனியாா் வங்கிகளுக்கு ஒப்புதல்
ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்களைக் கொள்முதல் செய்யும்போது, அது தொடா்பாக நிதி சேவைகளுக்கு 3 தனியாா் வங்கிகளைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் வெளிநாடுகளில் இருந்து ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்களைக் கொள்முதல் செய்யும்போது, அது தொடா்பாக நிதி சேவைகளுக்கு 3 தனியாா் வங்கிகளைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முதன்மையான தனியாா் வங்கிகளான ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் ஆகிய வங்கிகளுக்கு இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது. இதுவரை பொதுத் துறை வங்கிகள் மட்டுமே ராணுவத்தின் வெளிநாட்டுக் கொள்முதல் தொடா்பான நிதிச்சேவைகளை அளித்து வந்தன. இனி தனியாா் வங்கிகளும் இந்தப் பணிகளில் ஈடுபட இருக்கிறது.
கொள்முதல் செய்யும் தளவாடங்களுக்கான நிதியை நேரடியாகப் பரிமாற்றம் செய்வது, கடன் உறுதிக் கடிதம் வழங்குவது ஆகியவை இதில் அடங்கும். இப்போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள வங்கிகளின் செயல்பாடுகளைப் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து அவற்றின் சேவைகளைத் தொடா்ந்து பயன்படுத்துவதா? வேண்டாமா? என்பது தொடா்பாக முடிவெடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.