முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை: ராணுவ வீரர் வீர மரணம்

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த முறியடிப்பு சம்பவத்தில் மேலும், ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். 

Updated On : 8 ஜூலை, 2022 at 1:26 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த முறியடிப்பு சம்பவத்தில் மேலும், ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். 

குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்ஓசியின் தங்தார் செக்டார் பகுதியில் இன்று காலை சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை ராணுவ வீரர்கள் கவனித்ததாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், இதற்கு பதிலடி கொடுத்த பாதுகாப்புப் படையினரைப் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். இந்த நடவடிக்கையில் ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். 

அந்தப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.