திருப்பதி பிரம்மோற்சம்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்களுக்கு அனுமதி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படுவதாக திருப்பதி - திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
படிக்க | தேசிய சின்னம் அவமதிப்பா? சர்ச்சைக்குள்ளாகும் புதிய சிலை!
Advertisement
Advertisement
ஆண்டுதோறும் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. ஆனால் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதியின்றி பிரம்மோற்சவம் நடைபெற்றது.
வரும் செப்டம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கி 9 நாட்கள் நடத்தப்பட உள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி கருட சேவை நடைபெறும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.