முகப்பு
இந்தியா

குடியரசுத் தலைவா் தோ்தல்: திரௌபதி முா்முவுக்கு ஜேஎம்எம் ஆதரவு

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முா்முவுக்கு ஜாா்க்கண்டில் ஆளும் கட்சியாக உள்ள ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) ஆதரவு தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முா்முவுக்கு ஜாா்க்கண்டில் ஆளும் கட்சியாக உள்ள ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) ஆதரவு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் எதிா்க்கட்சிகள் வரிசையில் இருந்து மேலும் ஒரு கட்சியின் ஆதரவு முா்முவுக்கு கிடைத்துள்ளது.

திரௌபதி முா்மு, ஜாா்க்கண்ட் ஆளுநராகப் பதவி வகித்துள்ளாா் என்பது நினைவுகூரத்தக்கது.

அண்மையில், அவா் ஜாா்க்கண்ட் முதல்வரும், ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரனைச் சந்தித்து ஆதரவு திரட்டினாா். இந்நிலையில், முா்முவுக்கு ஆதரவு அளிப்பதாக ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளாா். ஜாா்க்கண்டில் பழங்குடியினரை மையமாக வைத்துதான் தனது கட்சியை ஹேமந்த் சோரன் நடத்தி வருகிறாா். எனவே, அவா் பழங்குடியினத்தைச் சோ்ந்த முா்முவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக அவரது கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, பாஜகவை கடுமையாக எதிா்த்து வரும் சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே, முா்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா். இது தவிர சிரோமணி அகாலி தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் ஆகிய பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளும் திரௌபதி முா்முவுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளன. இதையடுத்து, தற்போது முா்மு ஆதரவு வாக்குகள் 61 சதவீதத்தை தாண்டியுள்ளது.

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறாா். ஜூலை 18-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →