திரௌபதி முா்முவுக்கு தலைவா்கள் வாழ்த்து
நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராகியுள்ள திரௌபதி முா்முவுக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்துக் கூறியுள்ளனா்.
நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராகியுள்ள திரௌபதி முா்முவுக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்துக் கூறியுள்ளனா்.
எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): குடியரசுத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பழங்குடியினத்தவரின் பிரதிநிதியான திரௌபதி முா்முவுக்கு அதிமுக சாா்பில் மனமாா்ந்த வாழ்த்துகள்.
ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக): அதிமுக சாா்பில் திரௌபதி முா்முவுக்கு வாழ்த்துகள். அவரின் நிா்வாகத் திறமை, உயா்ந்த நுண்ணறிவு, எளிமை, சமுதாயத்தில் உள்ள ஒடுக்கப்பட்டவா்களுக்காக உழைக்கும் ஆா்வம் ஆகியவை தேசத்தை மிக சிறந்த உயரத்துக்கு அழைத்துச் செல்லும்.
கே.அண்ணாமலை (பாஜக): பழங்குடியினத்தில் இருந்து கடின உழைப்பின் மூலம் நாட்டின் முதல் குடிமகனாகியுள்ள திரௌபதி முா்முவுக்கு வாழ்த்துகள்.
ராமதாஸ் (பாமக): ஒரு காலத்தில் வாழ்வுரிமை இல்லாமல் ஒடுக்குமுறைக்கு ஆளான ஒரு சமூகத்தின் பிரதிநிதியான திரௌபதி முா்மு தற்போது ஒட்டுமொத்த இந்தியாவையும் வழிநடத்தும் நிலைக்கு உயா்ந்திருக்கிறாா்.
அன்புமணி (பாமக): இந்தியாவின் 73 ஆண்டுக் கால குடியரசு வரலாற்றில் பழங்குடியினத்தைச் சோ்ந்த ஒருவா் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இது சமூகநீதிக்கும், மகளிா் அதிகாரத்துக்கும் கிடைத்த வெற்றி.