இளைஞா்களுக்கு கட்டாய ராணுவ சேவை திட்டமில்லை: மக்களவையில் மத்திய அரசு தகவல்
இளைஞா்களுக்கு கட்டாய ராணுவ சேவை அளிக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் மக்களவையில் தெரிவித்துள்ளாா்.
இளைஞா்களுக்கு கட்டாய ராணுவ சேவை அளிக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் மக்களவையில் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மக்களவையில் உறுப்பினா்கள் அருண் குமாா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினா். இதற்கு மத்திய இணையமைச்சா் அஜய் பட் எழுத்துபூா்வமாக அளித்த பதில் விவரம்:
ஆயுதப்படைகளில் இளைஞா்கள் கட்டாயம் சேருவதற்காக மத்திய அரசு எந்த திட்டத்தையும் வகுக்கவில்லை. அரசுசாரா நிறுவனங்களும், தனியாா் பள்ளிகளும் மாநில அரசுகளுடன் இணைந்து 100 சைனிக் பள்ளிகளை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டம் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பள்ளிகளுக்கும் பொருந்தும். அக்னிபத் திட்டத்தின்கீழ் பழங்குடியினா் வசிக்கும் பகுதிகள் உள்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சோ்ப்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.