இந்தியா

மகள்கள் என்றாலே கடன்சுமை அல்ல: உச்ச நீதிமன்றம்

PTI


புது தில்லி: மகள்கள் என்றாலே அவர்கள் கடன்சுமை அல்ல என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. ஒரு பெண்ணுக்கு, அவரது தந்தை அளிக்க வேண்டிய பராமரிப்புச் செலவு குறித்த வழக்கில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஏ.எஸ். போபண்ணா தலைமையிலான அமர்வு முன்பு, மகளின் பராமரிப்பு செலவுக்கு தந்தை அளிக்க வேண்டிய தொகை குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பெண்கள் என்றாலே கடன் சுமை என்று தந்தை கூறினார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், மகள்கள் என்றால் கடன்சுமைகள் அல்ல என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 14வது பிரிவின் படி, சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை சுட்டிக்காட்டினர்.

விவாகரத்துக்குப் பின் மகளுக்கு மாதந்தோறும் ரூ.8,000மும், மனைவிக்கு ரூ.400ம் அளிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அந்த நபர் நிறைவேற்றவில்லை என்று நீதிமன்றத்தில் 2020ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இதில், இரண்டு வாரத்தில் மனைவி மற்றும் மகளுக்கு ரூ.2.50 லட்சம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பிறகு இந்த வழக்கு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்த போது, மனைவி இறந்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, படிப்பில் கவனம் செலுத்துமாறு மகளுக்கு அறிவுரை வழங்கிய நீதிபதிகள், அப்போதுதான் அப்பாவை சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறினர். பல ஆண்டுகளாக அப்பாவும் மகளும் பேசிக் கொள்வதில்லை என்று கூறப்பட்டது. இதற்கு இருவரும் பேசுமாறு நீதிபதிகள் கூறினர்.

ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் மகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்குமாறு தந்தைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழங்குடியின குழந்தைகளுக்கான கோடைக் கால கல்வி முகாம் நிறைவு

மாகாளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் காவடி எடுத்து நோ்த்திக்கடன்

வேளாளா் மகளிா் கல்லூரி டிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆட்டோ ஓட்டும் அன்பர்களே...!

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம்

SCROLL FOR NEXT