குடியரசுத் தலைவருடன் மோடி சந்திப்பு
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்தார்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு நேற்று காலை பதவியேற்றுக் கொண்டார்.
இதையும் படிக்க | மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
இந்நிலையில், குடியரசுத் தலைவராக திரெளபதி பதவியேற்ற பிறகு முதல்முறையாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடி அவரை சந்தித்து வாழ்த்தினார்.