இந்தியா

மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

DIN

நாடாளுமன்ற கூட்டம் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இரு அவைகளிலும் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவைகள் முடங்கியுள்ளது.

இதனால், மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ள மசோதாக்கள் மற்றும் பிற அலுவலகள் கடந்த ஒரு வாரமாக தேங்கி கிடக்கின்றன.

இந்நிலையில், வரும் காலங்களில் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்துவது தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் மோடி ஆலோசனை செய்து வருகிறார்.

இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பிரகலாத் ஜோஷி, அனுராக் தாகுர், கிரெண் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT