இந்தியா

ம.பி.யில் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 8 மாணவர்கள் காயம்

மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் இன்று காலை பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 மாணவர்கள் காயமடைந்தனர். 

DIN

மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் இன்று காலை பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 மாணவர்கள் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் அனுப்பூர்-ஆம்லை சாலையில் உள்ள உணவகம் அருகே காலை 7.30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கோட்வாலி காவல் நிலையப் பொறுப்பாளர் அமர் வர்மா தெரிவித்தார். 

அனுப்பூரில் இருந்து 22 கி.மீ தொலைவில் உள்ள ஆம்லை நகரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன், சாலையில் நாயைக் காப்பாற்றும் முயற்சியில், வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, கீழே கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் 11 முதல் 16 வயதுக்குட்பட்ட எட்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT