இந்தியா

ம.பி.யில் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 8 மாணவர்கள் காயம்

மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் இன்று காலை பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 மாணவர்கள் காயமடைந்தனர். 

DIN

மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் இன்று காலை பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 மாணவர்கள் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் அனுப்பூர்-ஆம்லை சாலையில் உள்ள உணவகம் அருகே காலை 7.30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கோட்வாலி காவல் நிலையப் பொறுப்பாளர் அமர் வர்மா தெரிவித்தார். 

அனுப்பூரில் இருந்து 22 கி.மீ தொலைவில் உள்ள ஆம்லை நகரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன், சாலையில் நாயைக் காப்பாற்றும் முயற்சியில், வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, கீழே கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் 11 முதல் 16 வயதுக்குட்பட்ட எட்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT