இரண்டு நாள் பயணமாக பூடான் செல்லும் ராணுவ தளபதி
இந்தியாவின் ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே 2 நாள் பயணமாக பூடான் செல்ல உள்ளார்.
இந்தியாவின் ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே 2 நாள் பயணமாக பூடான் செல்ல உள்ளார்.
அவரது இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு சம்பந்தமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமையும்.
இதையும் படிக்க: மீண்டும் தொடங்கியது சிம்புவின் ’பத்து தல’ படப்பிடிப்பு
Advertisement
இது குறித்து ராணுவத்தின் தரப்பில் கூறியிருப்பதாவது: “ ராணுவ தளபதியின் இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான நம்பிக்கை, நல்லுறவு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான புரிதலை அதிகப்படுத்தும். ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பூடான் அரசரை சந்திக்கவுள்ளார். மேலும், இந்தப் பயணத்தின்போது பூடான் நாட்டின் ராணுவ தளபதியுடன் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளவும் உள்ளார்.” எனக் கூறப்பட்டுள்ளது.