முகப்பு
இந்தியா

குஜராத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமி: மீட்பு பணிகள் தீவிரம்

குஜராத்தின் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமியை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
கோப்புப் படம்.
பகிர்:

குஜராத்தின் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமியை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள கஜன்வாவ் கிராமத்தில் இன்று காலை 8.30 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சிறுமி விளையாடிக்கொண்டிருந்தபோது கால் தவறி சுமார் 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியதாக அதிகாரிகள் தெரித்துள்ளன. 

ஆழ்துளைக் கிணறு நூறு அடி ஆழத்தில் இருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவ இடத்தில் ராணுவ வீரர்கள் மற்றும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுவும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.