இந்தியா

வீட்டுக்குள் ரூ.27 கோடி; ஆனால் பராமரிப்புக் கட்டணம் பாக்கி வைத்த அர்பிதா 

DIN

கொல்கத்தா: அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி ரூ.27.9 கோடி பறிமுதல் செய்த பெல்காரியாவில் உள்ள அர்பிதா முகர்ஜிக்குச் சொந்தமான கிளப் டவுன் குடியிருப்பின் வாசலில், பராமரிப்புக் கட்டணம் ரூ.21 ஆயிரம் நிலுவையில் இருப்பதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல், எட்டு வங்கி அதிகாரிகள், சுமார் 13 முணி நேரமாக, நான்கு நோட்டு எண்ணும் கருவிகளில் ஒரு நிமிடம் கூட இடைவெளி விடாமல் அர்பிதாவின் வீட்டில் பறிமுதல் செய்த ரூ.27.9 கோடியை எண்ணி முடித்துள்ளனர். இதோடு சேர்த்து, அர்பிதாவுக்குச் சொந்தமான இரண்டு வீடுகளில் இருந்து மடடும் பறிமுதல் செய்த தொகை ரூ.49 கோடி என்கிறார்கள்.

இது மட்டுமல்லாமல் ரூ.4.31 கோடி மதிப்பிலான தங்க நகை மற்றும் தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஒரு வீட்டுக்குள் இருந்து அலிபாபா குகை போல கட்டுக்கட்டாக பணமும் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த குடியிருப்பின் வாசலில், ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில்,  5வது பிளாக்குகான பராமரிப்புக் கட்டணம் ரூ.9,099ம், 2வது பிளாக்குகான நிலுவை ரூ.11,819ம் இருப்பதாகக் கூறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT