இந்தியா

ஹரியாணாவில் பெண்களுக்கு 36 மணி நேர இலவசப் பேருந்து பயணம்! எதற்கு தெரியுமா?

DIN

ரக்ஷாபந்தனையொட்டி பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத்தை பரிசாக அறிவித்துள்ளது ஹரியாணா அரசு. 

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷாபந்தன் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி, ஹரியாணா மாநிலத்தில் பெண்கள், அரசுப் பேருந்துகளில் 36 மணி நேர இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பெண்கள் இலவசமாக பேருந்துப் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் ரக்ஷாபந்தன் பரிசாக இது வழங்கப்படுவதாக ஹரியாணா அரசு கூறியுள்ளது. 

கடந்த ஆண்டும் இதேபோல பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத்தை ஹரியாணா அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT