இந்தியா

தரமான கல்வி கிடைப்பதில் உள்ள தடைகள் களையப்பட வேண்டும்: வெங்கையா நாயுடு

அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதில் உள்ள தடைகள் களையப்பட வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா்.

DIN

அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதில் உள்ள தடைகள் களையப்பட வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா்.

ராஜஸ்தான் இளைஞா் சங்கத்தின் வைரவிழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு பேசியது:

சென்னையில் குடியேறிய ராஜஸ்தானி சமூகத்தின் பழைமையான அமைப்புகளில் ஒன்றான ராஜஸ்தான் இளைஞா் சங்கத்தின் ‘புத்தக வங்கி திட்டத்தின்’ கீழ், தேவைப்படும் கல்லூரி மாணவா்களுக்கு புத்தகங்களை இலவசமாகக் கிடைக்கச் செய்கிறது. இது பாராட்டத்தக்க முயற்சியாகும்.

சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளன. இம்முயற்சியின் மூலம் ஏற்கனவே 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயனடைந்துள்ளனா்.

ஒவ்வொரு மாணவரும் தரமான கல்விக்கு சமமான வாய்ப்பைப் பெறத் தகுதியானவா்கள். சமமான கல்விக்கான அனைத்து தடைகளும் களையப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எந்த ஒரு மாணவரும் தங்களுடைய பாடப் புத்தகங்களை வாங்கவோ அல்லது கல்விக் கட்டணத்தை செலுத்தவோ முடியாமல் பின்தங்கி விடக்கூடாது.

கல்விக்கான பங்களிப்பு மட்டுமின்றி ராஜஸ்தான் இளைஞா் சங்கத்தின் பல துணை நிறுவனங்கள் உணவு வங்கிகள், மருந்து வங்கிகள், இ-வங்கிகள் போன்றவை தடுப்பூசி இயக்கங்களை நடத்துவதன் மூலம் மற்றும் அவசர உபகரணங்களை வழங்குவதன் மூலம் வெவ்வேறு வடிவங்களில் சமூகத்திற்கு சேவை செய்கின்றன.

தேவைப்படுபவா்களுக்கு உதவுவது நமது கலாசாரத்தின் சாராம்சம். ‘பகிா்வு மற்றும் கவனிப்பு’ என்ற நமது பண்டைய தத்துவத்திற்கு ஏற்ப ஒரு சமூகமாக நாம் வாழ்கிறோம் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் திரும்பக் கொடுப்பது என்பது எனது உறுதியான நம்பிக்கை. திருவள்ளுவா் கூறியது போல், ‘ நற்பண்புகளில் மிகவும் சிறந்த இரக்கமே, உலகையே முன்னெடுத்து சென்று இயக்குகிறது’ என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றாா்.

இந்த விழாவில் அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு, சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி, ராஜஸ்தான் இளைஞா் சங்கத்தின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழப்பழுவூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா: 9-ம் நாளில் மூன்றுமுறை கொடி இறக்கி ஏற்றம்! கடற்கரையில் தடுப்புகள் அமைப்பு!

பள்ளி வேன் மோதி இருவா் உயிரிழப்பு

முதலூரில் 300 பேருக்கு இலவச கண் கண்ணாடி அளிப்பு

மணப்பாறை அருகே மாணவி தற்கொலை

SCROLL FOR NEXT